உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தேமுதிக கரூர் புறநகர் மாவட்டம் சார்பில் , கரூர் மாவட்டம் ,கடவூர் ஒன்றியத்தில் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் உறுதிமொழி ஏற்றும், இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும், நினைவுப் பரிசு புத்தகம் வழங்கியும், மருத்துவமனைக்கு தேவையான சனிடைசர் முகக் கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக கரூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி. சிவம் ராஜேந்திரன், மைலம்பட்டி அரசு மருத்துவமனை தலைமை அலுவலர், உதவி மருத்துவர், செவிலியர்கள், தேமுதிக கரூர் புறநகர் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் தேவராஜ், சமூக ஆர்வலர் பொருளுதவி கிருஷ்ணபிள்ளை, ஊராட்சி செயலாளர் பொன்னர் ஆதாம் பாஷா, மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக